Monday, 23 May 2016

பரஞ்சோதி மகான்

நமது (ஜெகத் மகாகுரு, தத்துவ தவஞானி, ஞானவள்ளல்) பரஞ்சோதி மகான் அவர்கள், இந்திய நாட்டின் தென்பகுதியில் "காண்ஸாபுரம்" என்ற ஊரில் 2-5-1900ஆம் ஆண்டு இரவு 8.30 மணியளவில் பிறந்தார்கள். இந்த புனித நன்னாளை நாம் ஜெனன விழாவாக கொண்டாடி வருகிறோம்.

ஞான உதயம்

தாம் வசித்து வந்த ஊரில் 11.11.1911ஆம் தேதி பகல் 11மணிக்கு மேலை நாட்டு வல்லரசர் ஒருவரின் முடிசூட்டு விழா வைபவம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவதைக் கண்ணுற்ற போது, நமது குருபிரான் அவர்கள் இதயத்தில், அரசனைக் கடந்த பெரியவனாகிய கடவுளைக் காணவேண்டும் என்ற ஏக்கம் உதயமாயிற்று அவ்வேகத்தின் விளைவே கடவுளின்பால் காதலாகி, அக்காதலின் வேகவிவேகமே "பரஞ்சோதி" மகானாக விளைந்ததாகும். எனவே இப்புனித நன்னாளை நாம் "ஞானோதய தின" விழாவாகக் கொண்டாடி வருகிறோம்.

குருபிரான் அவர்கள் 1919ஆம் வருடத்திலேயே தனது இளமையில் பணியாளாக பர்மா சென்று விட்டபடியால் தனது தாய்மொழி போல் பர்மா மொழியையே பேசவும் எழுதவும் பழக வேண்டியதாயிற்று. 11.11.1911ல் ஏற்பட்ட ஏக்கத்தின் காரணமாகவே தனது வாழ்வோடு பற்பல யோக அப்பியாசங்களிடனும், மந்திர தந்திர ஜப தபங்களுடனும் மிக உருக்க நீர் வடித்து அரசனை கடந்த கடவுளை காணவேண்டும் என்ற தீவிரக் காதலால் பற்பல முயற்சிகளில் ஈடுபட்டு, தவ புனித வாழ்வு வாழ்ந்து வந்தார்கள். அதே ஊரில் ஆலயம் ஒன்றில் வசித்து வந்த பெரியவர் ஒருவர் தமது குருபிரானுடைய நல்லெண்ணத்தையும் ஏக்கத்தையும் அவரது விடாமுயற்சியையும் நன்கு கவனித்து வந்தார். விடிவெள்ளி தோன்றும் முன்பாகவே நமது குருபிரான் ஆலயத்திற்கு வருவதையும், வழிபாடுகள் செய்வதில் மிகுந்த உருக்கமிருப்பதையும், அவ்வாலயத்திலேயே வசித்து வந்த அவர் நன்கு கவனிக்க ஒரு சந்தர்ப்பமாக விளங்கிற்று.

எனவே அந்தப் பெரியவர் நமது மகானை வலியநண்பராக்கிக் கொண்டார். நட்பு முதிர்ந்து இரங்கூன் புதுக்காண் ரோட்டின் அருகாமையில் உள்ள பழைய குதிரை மைதானத்தில் 7.11.1938 ஆம் தேதி 11 மணி 11 நிமிடத்திற்கு அந்த பெரியவர் மூலம் நமது மகான் உபதேசம் பெற்றார்கள். குருபிரான் அவர்கள் சுமார் 21 ஆண்டுகளாக உருக்க நீர் வடித்துத் தேடிய பொருளை அடையும் மார்க்கம் கிடைத்துவிட்ட ஊக்க வேக விவேகத்தின் விளைவால் "பரஞ்சோதி" என்ற தன்னிலையாகிய பேரின்ப நிலை அடைந்தார்கள்.

நமது குருபிரானைக் கண்ணுற்ற அப்பெரியவர் மிக்க மகிழ்ந்து சிலாகித்தார். 7.7.1938 முதல் தமக்கு தெரிந்த இந்த உபதேசத்தை பிறருக்கும் வழங்கலாம் என்ற அனுமதியையும் வழங்கினார். 8.7.1938ல் இரங்கூன் டவுனில் சென்று கொண்டிருக்கும் சமயம் ஒரு பெரியவர் மகானைப் பார்த்து, தாங்கள் ஒரு பெரிய குருவைப் போல் விளங்குகிறீர்கள் என்று கூறினார். அன்றிலிருந்து தம் தொழில், மதம் யாவும் விட்டுவிட்டுத் தாம் ஒரு குருவாக வாழ்வது என முடிவெடுத்துக் கொண்டார்கள். அந்நாள் முதல் தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்ற நற்கருணையினால், உலக மக்கள் அனைவருக்கும் இந்த "குண்டலினி" உபதேசத்தை வாரி வாரி வள்ளலாக வழங்கினார்கள்.

ஜெகத் மகாகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் அவர்கள் 1939ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா வந்தார்கள். 7.1.198ந் தேதி 11 மணி 11 நிமிடத்திற்கு மலர்ந்த பரஞ்சோதி என்ற மலர், ஞானச் செல்வத்தால் உலக மக்களின் அறிவிற்கு எட்டாத அளவிற்கு உயர்ந்தும், கருணை என்ற அருட்செல்வத்தால் இப்பூவுலகெங்கும் அருள் மணம் கமழ்ந்து, கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் அவ்வருள் மணம் வீசிப்பரவி, பரிசுத்தமாகப் பிரகாசிப்பதற்கு காரணப் புருஷராக நமது ஜெகத்குரு திகழ்ந்து வந்தார்கள். 1944ஆம் ஆண்டு முதல் இந்திய நாடு மட்டுமின்றி மேலை நாடுகள் முழுவதும், தாம் ஒருவராக தனித்தே சென்று எல்லா நாடுகளிலும், ஆங்காங்கே உள்ள சீடர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளிலும், நகரங்களிலும் சபைகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.

பர்மா மொழியை தாய்மொழி போல் பேசியும் எழுதியும் பழகியிருந்த தமது குருபிரான் ஞானபீடம் ஏறியதும் "நான் - கடவுள்" என்ற தத்துவ தவஞான நீதிநூலை தமிழில் அருள் பாலித்துள்ளார்கள். உலகமக்கள் அனைவருக்கும் அவரவர்களின் தகுதிக்கேற்பச் சமாதானமாக வாழ வேண்டியதற்குள்ள உணவு, உறக்கம், உடை, தொழில், விவசாயம், அரசியல், விஞ்ஞானம், பேரின்பநிலை முதலியவற்றிற்குச் சரியான விளக்கங்களை எல்லா நாட்டிற்கும் பொதுவாக எளிமையாக விளக்கிக் கூறுவதற்காக "உலக சமாதான ஆலயம்" சென்னையில் 20.7.46ல் குருபிரானால் தொடங்கப்பட்டது.
சென்னை புதுவண்ணாரப் பேட்டை 'டோல்கேட்'டை ஒட்டினார் போல் அமைந்திருக்கிறது, உலக சமாதான ஆலயம். ஞானவள்ளல், தத்துவ தவஞானி, ஜெகத்மகா குரு என்றெல்லாம் சீடர்களால் போற்றப்படும் பரஞ்சோதி மகானின் சமாதியானது, இந்த உலக சமாதான ஆலயம் என்ற கட்டடத்தில்தான் அமைந்துள்ளது.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், இந்தோனேஷியா என்று உலகநாடுகளில் எல்லாம் மகான் தேடிப்போய் 'தீட்சை'யைக் கொடுத்து மக்களை தன்னைப் போலவே ஞானத் தெளிவு நிலைக்கு கொண்டு வரும் பணியை மேற்கொண்டார்.
....வாழ்க வளமுடன் என்ற சொல்லுக்கு சொந்தக் காரராக விளங்கும் வேதாத்ரி மகரிஷி, நடிகவேள் எம்.ஆர்.ராதா இன்னும் சில பிரபல அரசியல், ஆன்மிக தலைவர்கள் மகானின் சீடர்களாய் இருந்து அவர் தவத்தை சீராக கடைப் பிடித்தவர்கள்... 
மகானின் புத்தகத்திலிருந்து,: 

...ஞானமும், அரசியலும் ஒன்றுபட்ட அன்றே, உலக சமாதானம். பசிப்பிணியையும் ஒழித்து, பணத்துக்குள்ள மரியாதையையும் ஒழித்து, உருவ வழிபாடுகளையும் ஒழித்து, உலகிலுள்ள ஜாதி, மத, வேத, போத-பேதங்களையும் ஒழித்து, எந்நாட்டில் விளைந்த விளைவானாலும் அது எல்லா நாட்டிற்கும் பொதுவாய் நிர்வகிக்கும் நிர்வாகமுள்ள அன்றே உலக சமாதானம்!

... புகழை நம்பி, அறிவை  அடிமைப் படுத்தாதீர்கள், துன்பத்திற்கு அஞ்சி உண்மையை விட்டு விடாதீர்கள்... ஆயிரம் ஆண்டு வணக்கத்தை விட , அரை நிமிட ஆராய்ச்சியே மேல்!

தோபா சித்தர்

திருச்சிராப்பள்ளியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் சிவகுரு நாதப்பிள்ளை சிவகாமி அம்மையாரும் கருத்தொருமித்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர், சிவகுருநாதப் பிள்ளை இல்லறத்தை நல்லறமாகச் செய்தார். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இரண்டு ஆண் மக்களையும், பெண் மகவு ஒன்றையும் பெற்றனர்.

தோபாசுவாமிகளின் தோற்றம்:

அதன் பின்னர் சில நாட்களுக்குப் பிறகு இவர் தன் மனைவியாருடன் மூர்த்தி தல தீர்த்தங்களை முறையாகச் செய்து கொண்டு முடிவில் இராமேஸ்வரம் சென்று அங்கு இராமபிரான் பூசித்த இராமலிங்கப் பெருமானை வணங்கிப் போற்றி தம்மிடஞ் சேர்ந்து இருந்தனர்.

இவர்கள் இராமேஸ்வம் சென்று வந்த பிறகு முற்பிறவி தவப்பயனாலும் இராமலிங்கப் பெருமானின் திருவருளாலும் சிவகாமி அம்மையார் கர்ப்பம் தரித்து உரிய காலத்தில் ஒர் ஆண் மகனை பெற்றார். இராம நாத சுவாமியின் திருவருளால் பிறந்த நம் சுவாமிகளுக்கு இராமலிங்கம் எனத் திருநாமமிட்டனர்.

தோபா சுவாமிகளின் இளமைப் பருவம்:

பாலப் பருவம் நீங்கி குமாரப் பருவம் எய்திய இராமலிங்கத்தை முறைப்படி கல்வி கற்க பள்ளியில் சேர்த்தனர். முற்பிறப்புக்களிலேயே அனைத்துங் கற்ற இவர் வருத்தமின்றி பழைய பாடங்களைத் திருப்புவதைப் போல ஆசிரியர்களும், மாணாக்கர்களும் வியக்கும் வண்ணம் கற்றுத் தேர்ந்தார்.

பெயர்க்காரணம்

இவருக்கு தோபா சித்தர் என்ற பெயர் வந்ததற்கும் ஒரு காரணம் உள்ளது. இவர் ஒரு மகான் என்று தெரிந்த பிறகு பள்ளிச்சிறுவர்கள் கூட இவரை சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை 'தோடுடைய செவியன்' என்ற பாடலைப் பாடுங்கள் என்று கேட்பார். அவர்களும் பாடுவார்கள். பல சமயங்களில் மெய்மறந்த நிலையில் உட்கார்ந்து அந்த பாடலைக் கேட்டுக்கொண்டிருப்பார்.

இது பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு மாணவர்களைப் பார்த்து "தோ பா" ('தோ' என்பது 'தோடுடைய செவியன்' 'பா' என்ற எழுத்து பாடுங்கள் என்பதை குறிக்கும்.) என்பார். "தோ பா" என்ற உடனேயே மாணவர்கள் பாடத்தொடங்கி விடுவார்கள். இதனால் சிறுவர்கள் இவரை அன்புடன் 'தோபா சாமி' என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். அதுவே அவருக்குப் பெயராகவும் அமைந்து விட்டது. (குழந்தைகளுக்கு பெற்றோர் பெயர் வைத்துத்தான் நாம் பார்க்கிறோம். ஆனல் இங்கு பார்த்தீர்களா ஒரு தகப்பனுக்கு குழந்தைகள் பெயரிடும் அதிசயம். இது ஞானிகளுக்கே கிடைக்கும் வெகுமதி!) தொடந்து கீழே படியுங்கள்:

இவர் கருவில் திருவுடையவராகவே தோன்றி 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலேயே துறவு பூண்டு அவதூதராக வாழ்ந்திருக்கிறார். இவர் 18ம் நுற்றாண்டின் பிற்பாதியில் திருச்சியில் தோன்றியவர். சுமார் 20 வயதளவில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். இவர் பணியாற்றிய படைப்பிரிவு சென்னையை அடுத்துள்ள ஆவடியில் உள்ளது. அக்கால ஆங்கிலேயே படைப்பிரிவுகளில் காலாட்படையும், குதிரைப்படையும், கப்பல் படையும் இருந்தன. இவர் குதிரைப்படையில்தான் பணியாற்றினார். ஆங்கிலேயர் படைப்பயிற்சியில் தினமும் காலை 6 மணி முதல் 1 மணிவரை படைப்பயிற்சி நடைபெறும். அதன் நபிறகு தேனீர், வகுப்புகள், சிற்றுண்டி என்று பல பிரிவுகள் முறைப்படி தொடர்ந்து நடைபெறும். எல்லாப் பணிகளையும் இவர் திருப்திகரமாகவே செய்து வந்தார். 

பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் படைவீரர்கள் வெளியில் சென்று வருவார்கள். ஆனால் தோபா சாமியோ சுறுசுறுப்பான இளைஞனாக இருந்தாலும் அவர் வெளியில் செல்வதே இல்லை. பணிமுடித்த வேளைகளிலெல்லாம் படைவீரர் தங்கும் இடத்திலேயே தவத்தில் ஆழ்ந்து விடுவார். காலம் செல்லச் செல்ல சாமியின் தவக்காலமும் அதிகரித்து விட்டது. 

படைப்பிரிவில் படைவீரர்கள் இரவு 9 மணிக்கெல்லாம் அவர்களுக்குரிய கட்டிலில் படுத்து தூங்கி விடவேண்டும். அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து 6 மணிக்குள் தங்கள் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சுத்தமாக சீருடை அணிந்துகொண்டு படைப் பயிற்சி மைதானத்திற்கு சென்றுவிட வேண்டும். தினமும் இரவு வேளைகளில் கண்காணிப்புக் காவலர்கள் சோதனைக்கு வந்து செல்வார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு தோபா சாமி இரவு வேளைகளில் தியானம் செய்தபடி இருப்பதையும் காலை 6 மணிக்கெல்லாம் படைப்பயிற்சி திடலுக்கு முறைப்படி வந்துவிடுவதையும் பார்த்திருக்கின்றனர். அவர் எதிலும் சரியாகவே இருந்ததால் அவர் தியானம் செய்ததை ஒரு குறையாகவே யாரும் எடுத்துக்கொள்ளவில்லை. அதுபற்றி மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இல்லை.

ஒருமுறை காலை 6 மணிக்கு தோபா சாமி தவத்தில் இருந்த நேரத்தில் மேலதிகாரி படைவீரர்கள் தங்கும் கூடாரத்தினுள் நுழைந்தார். அங்கு தவத்தில் தோபா சாமி ராணுவப் பயிற்சிக்கு தயாராகாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்ற மேலதிகாரி, தவத்தை கலைக்காமல் படைப்பயிற்சி திடலுக்கு வந்தார். அங்கு சாமி முறையான சீருடையுடன் படைப்பயிற்சி பெறத் தயாராக அவருக்கு உரிய வரிசையில் நின்று கொண்டிருந்ததையும் கண்டார். மேலதிகாரி கேள்வியுற்ற போதுதான் விசயம், அவர் ஒரு மகா சித்தர் என்பது தெளிவு பிறந்தது. அதன் விளைவாக சாமி படைவீரர் பணியை விட்டு விலகி சுதந்திர துறவியாக வெளியில் வந்து, சென்னையிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் தம் சித்தாடல்களைச் செய்து கொண்டிருந்தார்.

சித்தர் வாழ்வு:

இந்த தோபா சாமி தற்போதைய மைலாப்பூர், சைதாப்பேட்டை, தாம்பரம் போன்ற பல பகுதிகளிலும் கூட "சித்தன் போக்கு சிவன் போக்கு" என்பதற்குரிய விதத்தில் சுற்றி திரிந்திருக்கிறார். பக்தர்கள் பல பேருக்கு உதவியும் உள்ளார்.

சென்னையிலும் சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளிலும் சுற்றிக்கொண்டிருந்த சாமி ஓரிரு ஆண்டுகளிலேயே தம்மை மறந்த அவதூதராக மாறிவிட்டார். உடை அணியவேண்டும் என்ற உணர்வையே அவர் இழந்துவிட்டார். சில மாதங்களிலேயே அவருக்கு பக்தர்கள் பலர் சேர்ந்துவிட்டதால் அவருடைய தவ வலிமையை மக்கள் உணரத் தலைப்பட்டனர். இவர் யாரிடமும் தீட்சை பெற்றதாகவோ, வழங்கியதாகவோ தெரியவில்லை. இருப்பினும் சீடர்களைப்போல் சிலர் அவருடனையே இருந்து வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சித்தநாத சுவாமிகள். தோபா சாமிக்காக சித்தநாதசாமிகளே தோடுடைய செவியன் பாடலைப் பாடினார். அந்த சித்தநாதன்தான் கடைசிவரை சாமியின் கூடவே இருந்தவர்.

இவர் அவதூதராக மாறிய பிறகு 1840க்கும் 1850 க்கும் இடைப்பட்ட காலத்தில் சென்னை யில் வாழ்ந்திருக்கிறார். இந்த பத்தாண்டு காலத்தில் இரமலிங்க அடிகளும் சென்னையில் வாழ்ந்திருக்கிறார். அக்காலத்தில் ஒரு சில ஆண்டுகள் இராமலிங்க அடிகள் (வள்ளலார்) தினமும் தவறாமல் திருவொற்றியூர் தியாகரஜ பெருமான் திருக்கோவிலுக்கு சென்று தியாகராஜ பெருமானையும் வடிவுடையம்மனையும் வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது தோபா சித்தர் அந்த கோவில் சன்னிதித் தெருவில் அவதூதராக நடமாடிக்கொண்டிருந்தார். அப்போது தோபா சித்தர் தெருவில் போகிறவர்களையும் வருகிறவர்களையும் பார்த்து இதோ ஒரு நாய் போகிறது, இதோ ஒரு நரி போகிறது, இதோ ஒரு காளைமாடு போகிறது என்று ஏதோ ஒரு விலங்கின் பெயரால் அழைத்து வந்தார். அவருடைய பக்தர்களுக்கெல்லாம் இது ஒரு வியப்பான தொடர் நிகழ்ச்சியாக இருந்து வந்தது. ஒரு நாள் அவர் சன்னிதித் தெரு வழியே இராமலிங்க அடிகள் (வள்ளலார்) சென்றதைப் பார்த்து இதோ ஒரு மனிதன் போகிறான் என்று மகிழ்ச்சி பொங்க கத்திவிட்டார்.

19 நூற்றாண்டின் முற்பகுதியில் சாமி சென்னையை விட்டு வேளியேற முற்பட்டார். அப்போது அவருடைய முக்கிய சீடர்கள் சிலர் அவரை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர். குதிரை வண்டி வேலூர் சென்றதும் அங்கே சாமி இறங்கிவிட்டார்.

அவருடன் சீடர் சித்தநாதனும் இறங்கிவிட்டார். அதன் பிறகு சாமி வேறெங்கும் செல்லவில்லை. வேலூரிலேயே சுமார் 25 ஆண்டுகள் சித்தாடல்கள் பல புரிந்து கொண்டு அவர் சமாதி கூடியபோது அவருக்கு வயது 70 இருக்கும். மக்கள் இன்றும் அவர் சமாதியில் வழிபாடு செய்கின்றனர். அவரது முக்கிய சீடரான சித்த நாதரே அவருக்கு சமாதி எழுப்பி அதன்மீது லிங்க பிரதிஷ்டை செய்துள்ளார். சிறிது காலத்திற்கு பிறகு சித்தநாதரும் அங்கேயே சமாதி கூடினார். லிங்கத்திற்கு எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நந்தியின் அடியில் அவருடைய சமாதி உள்ளது.

சமாதி உள்ள இடம் :

வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் சைதாப்பேட்டை மெயின்பஜாரில் உள்ள சாலையில் அவருடைய சமாதி உள்ளது. சித்தரின் சமாதி இப்போது ஒரு மடாலயமாக வளர்ந்துள்ளது.

Monday, 16 May 2016

மீஞ்சூரில்

1. செம்புலிபுரம் செங்காளியம்மன் கோவில்

2. பஞ்சேஷ்டி
அகத்தீஸ்வரர் - ஆனந்தவல்லி
வரலாறு  - சுகேது என்ற அரக்கன் கடலில் ஒளிந்துகொண்டான்.
சிவ பெருமான் அகத்தியரிடம் நீ சென்று இந்த செயலை முடித்து வா என அனுப்புகிறார்.
அகத்தியர் அக்கடலை குடித்து விடுகிறார். கடலில் உள்ள நீருடன் சுகேதுவும் அவர் வயிற்றினுள் சென்று விடுகிறான் .
அகத்தியர் சிறிது நீரை உமிழ்ந்த நீரை "அகத்தியர் உமிழ் நீர் தீர்த்தம்" என்கின்றனர் .
இங்கு வீற்றிருக்கும் அம்மன் முக்கண் உடையவர். அவரின் இடக்கால் முன்னோக்கி இருக்கும்...
இது தீயவைகளை அழிக்கும் கோலத்தில்  வீற்றிருக்கிறார்.
காஞ்சி அரசர்க்கு தரிசனம் தந்தார்.
அகத்தியரின் சீடர் புலத்தீஸ்வரர் அஷ்டலிங்கம் பிரதிஷ்டை செய்தார்.
நவக்கிரகம், அஷ்ட திக் பாலகர்கள் இன்னும் பல்வேறு மூர்த்திகளின் சிலைகள் அழகிய வேலைப்பாடுடன் நிறைந்து உள்ளது .ஆண்டுக்கு ஒருமுறை அகத்தியரே நேரில் இங்கு வந்து தரிசித்து செல்வதாக ஐதீகம்.

3. ஆண்டாள் குப்பம்
பழைய பெயர் : சுப்பரமணியபுரம்
முருகன் பிரம்மனிடம் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் கேட்கிறார்.
பிரம்மபிரான் சொல்லாமல் போகவே அவரை சிறை வைத்தார் .
பின் சிவபெருமான் கேட்டு கொண்டதிற்கிணங்க பிரம்மபிரான் தலையில் குட்டி விடுவித்தார்.

4.பொன்னேரி
மற்றொரு பெயர் : மங்களபுரம் , கும்பமுனிமங்கலம்
சிவபெருமான் தவத்தில் இருக்கும் போது பார்வதி தேவி பனித்துளி தூவி விளையாடுகிறார்.
தவம் களைந்த சிவபெருமான் பார்வதியை சபித்து விடுகிறார்.
பார்வதியை நாரதர் சந்தித்து வில்வவனம் சென்று தாமரை இலையில் அன்னம் படைத்து பதினோரு அமாவாசை தோறும் படைத்து வருமாறு கூறுகிறார்.
பார்வதி தேவியும் அவ்வாறு செய்யவே சிவபெருமான் அங்குள்ள ஆற்றில் தோன்றி பார்வதி தேவியை கயிலாயம் அழைத்து செல்கிறார்.
பொன் ஏர் கொண்டு அகத்தியர் இந்த ஊரை உழுது செழிப்பாகினார் .
இக்கோவிலில் பொன் ஏர் சின்னம் பொறித்து இருக்கிறார்கள்.
இக்கோவில் சோழர்கள் கட்டியதால் கஜ பிருஷ்டம் ( யானையின் பின்புறம் ) போல அமைந்திருக்கும்.

5.திருஆயற்பாடி
ஆரண்ய நதி
கரிகிருஷ்ணபெருமாள் கோவில் - ஆறு அதிசயங்கள்
ஆயற்பாடி மக்கள் அதிகம் வாழும் ஊர் . இந்த ஊர் சிறுவர்கள் விளையாடி கொண்டு இருந்த போது ஏதோ தட்டுப்பட பெரியவர்கள் வந்து  மண்ணால் ஆன ஒரு சுயம்பு கிருஷ்ண வடிவம் கண்டனர் . அவரின் கைகளில் மாடு ஓட்டும் குச்சி வைத்து இருப்பார். உருவம் சாய்ந்து இருக்கும்.
மண்டபமும் சாய்ந்த தூண் கொண்டு இருக்கும்.
இக்கோவில் கரிகால சோழன் கட்டியதால் கரி என்ற சொல் முன்னிற்கிறது.
குளம், ஆறு என் இரு நீர்நிலைகள் உள்ளது
தாயார் இடப்பக்கம் இருக்கிறார்.
இரண்டு கொடிமரம் இருக்கிறது. ஒன்று கிருஷ்ண பகவானுக்கு மற்றோன்று ராமருக்கு.
கிருஷ்ணர் இரு கைகள் உடையவராய் காட்சி தருகிறார் .

6.மீஞ்சூர் 
வரதராஜ பெருமாள் - பெருந்தேவி அம்மையார்
ஸ்ரீதேவி பூதேவி இருவரும் பெருமாளின் பக்கத்தில் காட்சி தருவார்கள்.
காஞ்சியின் கோவில்களில் கிடைக்கும் புண்ணியம் இங்கு வந்து தரிசனம் செய்தாலும் கிடைக்கும்.
கிழக்கு பார்த்த கோவில்.

7.ஏகாம்பரேஸ்வரர் - வடகாஞ்சி - மீஞ்சூர்
காசி விஸ்வநாதர் - விசாலாட்சி
இஸ்தல விருட்சம் மாமரம்.
வன்னி மரம் கீழ் நாகராஜன்.
அத்திமரம் 

8.தேவதானம் - வட ஸ்ரீரங்கம் 
ரங்கநாயகி
பெருமாள் ஆமையாக உருக்கொண்டு, அமிர்தம் பெற பாற்கடலில் வாசுகி பாம்பை கொண்டு, மேருமலையை மத்தாக கொண்டு கடைந்து தேவர்களுக்கு
அரக்கர்களிடம் அமிர்தம் பெற உதவியதால் தேவர்கள் பெருமாளுக்கு தானமாக கொடுத்த ஊர்.
இக்கோவிலில் உள்ள சிலைகள் சாலிகிராம கற்களால் சாலிகிராம ராஜாக்களால் கட்டபெற்றது.
ஸ்ரீரங்கம் பெருமாளை விட 11/2 அடி பெரிய பெருமாள் ( சிலையின் மொத்த உயரம் 51/2 அடி)
உலகுக்கு படி அளந்து விட்டு மரக்காலின் மேல் படுத்து இருக்கிறார் .
செண்பக மரம்
பலா மரம்
அரசமரம்

9.நெய்தவாயில் - வெண்லிங்கம்
அக்னீஸ்வரர் - திருபுரசுந்தரி
சோழராஜா வரும் வழியில் புதரில் சூர்ய ஒளி பட்டு அங்கிருந்த வெண்லிங்கம் ஒளிவிட்டு கொண்டிருந்தது.
அதனை கண்ட ராஜா அங்கு ஒரு கோவில் எழுப்பினார் .

10.திருவள்ளைவாயில்
திருவள்ளீஸ்வரர் - சாந்தநாயகி
மகிழ மரம்
மேற்கு பார்த்த கோவில் - கோபுர  நிழல் கீழே விழாது ( தஞ்சாவூர் மாதிரி அமைப்பு கொண்ட கோபுரம் )

11.வட ராமேஸ்வரம்
ஊர் : கோயிலடி
சிந்தாமணீஸ்வரர் - சிவகாமி 
பஞ்ச பிரம்ம ஷேத்ரங்களில்  ஒன்று 
காட்டூர் , பழவேற்காடு - கடற்கரை அருகில்
படகில் சென்றால் குறைவான நேரத்தில் செல்லலாம் .
பறவைகள் சரணாலயம்.
Dutch cemetery
பஞ்ச பிரம்ம ஷேத்ரம் - ஒரே நேர்க்கோடு  - அகத்திய ஆஸ்ரமம் - சுருட்டபள்ளி - பெரிய பாளையம்

12. திருவாலீஸ்வரர்  - திரிபுரசுந்தரி
பூந்தோட்டம்
இராவணன் பிரம்மனின் பேரன்.
இராவணனுக்கும் வாலிக்கும் போர் நிகழும் முன் வாலி இங்கு வந்து வழிபட்டார்.
இக்கோவில் சோழர்கள் கட்டியதால் கஜ பிருஷ்டம் ( யானையின் பின்புறம் ) போல அமைந்திருக்கும்.

13.வைகுந்த பெருமாள்
சிவன் பெருமாள் நேரே சந்தித்தல்

14.திருபாலைவனம்
திருபாலீஸ்வரர் - அமிர்தேஸ்வரர் - லோகம்பிகை (வலப்பக்கம் )
பாலை மரங்கள் நிறைந்த காடு
தேவர்கள் அமிர்தம் உட்கொள்ள இங்கு வந்தனர் . முதலில் கொஞ்சம்
அமிர்தத்தை கொஞ்சம் எடுத்து வைத்து இறைவனை வழிபட்டு உட்கொண்டனர் .
பின் அங்குள்ள குளத்தில் கை அலம்பினர்.
அந்நீரை குடிக்கும் பொருட்டு அரக்கர்கள் தவளை உருக்கொண்டு அங்கு வந்தனர்.
அக்குளத்தில் தவளைகள் வாழ கூடாது என ஒரு சாபம் ஏற்பட்டு அரக்கர்கள் அமிர்தம் உண்ண தடை ஏற்பட்டது.
இக்கோவில் சோழர்கள் கட்டியதால் கஜ பிருஷ்டம் ( யானையின் பின்புறம் ) போல அமைந்திருக்கும்.
பிற்காலத்தில் அந்த சோலையில் சோழ மன்னன் தனது பரிவாரத்துடன் வந்து தங்கிய நேரத்தில் பாலை மரத்தில் கட்டி வெய்த்திருந்த யானை, குதிரை போன்ற பிராணிகள் மயக்கமடைந்து விட்டன. அதனால் கோபம் கொண்டு காரணம் அறிய சோழ ராஜா அம்மரங்களை வெட்ட சொல்கிறார். மரங்களை வெட்டியதும் அதிலிருந்து இரத்தம் வந்ததை கண்ட அரசன் அதிர்ச்சி அடைகிறார். ஒரு அசரீரி அங்கு கோவில் கட்டுமாறு பணிக்கிறது. இருபது வருடம் அங்கே தங்கி இருந்து கோவில் கட்டி கொடுத்தார். கதவிற் கணபதி ( கோவில் கதவில் இருந்த சிறிய கணபதி )
வெட்டுப்பட்ட தடம் லிங்கத்தின் மேல் இன்றும் இருக்கிறது .
தீர்த்தம் - அமிர்தபுஷ்கரணி 

15. சதுர்வேதிபுரம்
இரண்டு மூலவர்கள்
அஷ்டதீஸ்வரர் - அஷ்டம்பிகை 
சதுர்வேதிஸ்வரர்
அகத்தியர் அங்கு 108 மண்ணால் ஆன தினமும் ஒரு சிவலிங்கம் என  108 லிங்கங்களை செய்தார் .
ஆனால் விநாயகரை வழிபடாமல் இக்காரியத்தை ஆரம்பித்ததால் 108 வது நாள்  அனைத்து சிவலிங்கங்களும் விநாயகராய் உருக்கொண்டு விட்டது 
இவ்வாறு வழிபட்டால் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என சிவபெருமானே அகத்தியருக்கு அருளினார் 

ஏறு அழிஞ்சல் மரம்
2500 ஆண்டுகள் பழமையான மரம் 
இம்மரத்தின் பழத்தில் உள்ள விதைகள் கீழே விழுந்த பிறகு அதில் சில விதைகள் தானாகவே மரத்தின் கிளைகளில் ஒட்டிக்கொள்ளும்.
இவ்விதைகளை வேறு எங்கு சென்று போட்டாலும் முளைக்கவில்லை .

16.புழல் -
கணவன் மனைவி
கணவன் வேலைக்கு சென்று  வீட்டிற்கு வந்ததும் கணக்கு வழக்குகளை மனைவியிடம் காட்டுவது.